யானைகளை இயற்கையின் ஒரு பகுதியாகத்தான் நமது முன்னோர்கள் கருதினார்கள். மனிதன் எல்லா உயிர்களோடும் வாழ்வதுதான் முழுமையான வாழ்வு என்பதை அறமாகக் கொண்டிருந்தார்கள்.
குறிஞ்சி நிலத்தைக் காட்டுயிர்களின் வாழ்விடமாக விட்டு வைத்திருந்தார்கள். குறிஞ்சியும், முல்லையும் திரிந்தால் பாலையாகும் என்ற அறிவியல் பார்வை அவர்களுக்கு இருந்தது. இன்று குறிஞ்சியும், முல்லையும் வளர்ச்சியின் வன்முறையால் குதறப்படுகிறது.
யானையின் உணவாக இயற்கை அளித்த 82 வகைத் தாவரங்கள், 59 வகை மரங்கள். 23 வகை புற்கள் முளைக்கும் காடுகளில் கட்டடங்கள், தார்ச்சாலைகள், சுரங்கம், மின்திட்டம், தொழிற்சாலைகள், ஆன்மீகக் கூடங்கள், தொடர்வண்டிச்சாலைகள், தேயிலைத்தோட்டம், விவசாய நிலம், நீர்ப்பாசனத் திட்டம், இராணுவப் பயிற்சி முகாம், அகதிமுகாம், கல்விநிலையம். கலவிக்கூடமென்று நகர் மயம் ஆக்கியதால் யானைகளின் உணவுக் களஞ் சியங்கள் அழிக்கப்பட்டன.
இயற்கையின் புவியியல் விதிகளுக்கு மாறாக உருவான வாழ்வு முறைதான் மனிதனோடு யானையை, யானையோடு மனிதனை மோதவைக்கிறது.
Reviews
There are no reviews yet.