தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் : இக்கட்டுரைகளின் ஆசிரியர் தி.நா சுப்பிரமணியன் குறித்து கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பூர்வகலாவில் முன்பு எழுதியது,
“1930 ஆம் ஆண்டளவிலே எழுதத் தொடங்கிய தி.நா.சு. நூல்களைவிட, சஞ்சிகைகளுக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் கதைகளும் குறிப்புகளும் நூற்றுக்கணக்கானவை. ஆக்க இலக்கியத்திலாயினும் சரி, அறிவு இலக்கியத்திலாயினும் சரி, ஆய்வறிவுக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் அவர் அளித்த முக்கியத்துவமே, இன்றைய தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர் பெரும்பாலாரிலிருந்து அவரை வேறுபடுத்துகிறது.”
“ஆராய்ச்சி மொழி ஆங்கிலமே” என்றிருந்த காலத்தில் தி.நா. சுப்பிரமணியன் தனது நூலைத் தமிழில் எழுதி உதவினார்.
தாய்மொழி மூலம் உயர்கல்வியும் ஆராய்ச்சிகளும் நடைபெற வேண்டும் என்று சுப்பிரமணியன் ஆரம்பத்திலிருந்தே கருதி வந்தமைக்கு இம்முயற்சியும் சிறந்த சான்றாகும்.”
“என்னை பொறுத்தவரையில் திரு. சுப்பிரமணியனது சிறப்பியல்பு அவரது நடுவுநிலைமையாகும்.
Reviews
There are no reviews yet.