சரின்னு சொல்லுங்க அப்பா நூலைப் பற்றிய குறிப்பு
வகுப்பறையின் மீதும் கற்பித்தலின் மீதும் அதீத
அக்கறை கொண்ட திரு. பாலமுருகனின் இந்நூல்,
இளைய தலைமுறையின் உலகம் இப்படி இருக்க
வேண்டும் என்ற ஆர்வத்தால் பின்னப்பட்டிருக்கிறது.
பின்னலின் மூன்று முடிச்சுகளைப் போலக்
குழந்தைகளின் மீதான அக்கறை, அன்பு, நம்பிக்கையை
இறுகப் பின்னும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டே
இருக்கிறார் பாலமுருகன்.
பின்னலின் ஒவ்வொரு இழையிலும் உணவு, உடல்நலம்
காத்தல், உடலியக்க விளையாட்டுகள், இயற்கை மற்றும்
சுற்றுச்சூழல் பேணுதல் போன்றவை பக்குவமாய்
எடுத்துக் கோக்கப்பட்டுள்ளன.




Reviews
There are no reviews yet.