கொங்கு நாட்டு பாறை ஓவியங்கள் நூல் பற்றி
இந்நூலில் குறிப்பிடத்தக்க சிறப்பான முன்னெடுப்பாக, கொங்கு நாட்டில் உள்ள பாறை ஓவியங்களுக்கும் அந்த பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் இடையே உள்ள பண்பாட்டு தொடர்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
பாறை ஓவியங்களில் பிரதிபலிக்கும் இக்கலாசார கூறுகள் நேரடி கள ஆய்வின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் வீட்டு ஓவியங்கள், கோயில்களில் வரையும் ஓவியங்கள், மற்றும் சடங்குகள் ஆகியவை பாறை ஓவிய கலையின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் முக்கிய எடுத்துக்காட்டுகளாகக் காட்டப்பட்டுள்ளன.
இது போன்ற விரிவான பண்பாட்டு ஆய்வை இதற்கு முன்பு எவரும் மேற்கொண்டதாகக் குறிப்பிடப்படவில்லை.
எனவே, இது பாறை ஓவியங்களை அணுகும் முறையில் ஒரு புதிய முன்னெடுப்பாகும்.
கொங்கு நாட்டு பாறை ஓவியங்கள், அதன் பரந்த அளவான பரப்பும், அதில் நிறைந்த பண்பாட்டு சித்திரங்களும், குறிப்பிடத்தக்க சிறப்பை கொண்டவை.
இவை இயல்பாக செஞ்சாந்து மற்றும் வெண்சாந்து போன்ற வரையப்பட்டவை மட்டுமல்ல; கருப்பு உள்ளிட்ட பிற நிறங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளமை இக்கலையின் வித்தியாசத்தையும் வளத்தையும் வெளிப்படுத்துகிறது.




Reviews
There are no reviews yet.