நாம் தொலைத்த மதுரை வீதிகள் நூல் பற்றி
பழம்பெரும் மதுரையின் தெருக்கள், அதே மரபோடும் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அக்கசாலை, எழுத்தாணிக்கார தெரு, தென்னை ஓலை காரத்தெரு என பல்வேறு பெயர்கள் இன்றும் வழங்கப்பட்டும்,
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட சில தெருக்கள் இன்றைய ஏ.ஐ. யுகத்தில் மறைந்தும் போய் உள்ளன.
”மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின் இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்”
என்று பரிபாடல் மதுரை நகர் தாமரை மலருக்கு ஒப்ப அழகுடன் உள்ளது என வர்ணிக்கிறது.
இந்தப் பாடலின் உண்மை பொருளை இப்போதும் உணர முடியும்.
தாமரை மலரின் இதழ்களை ஒத்த வகையில் தெருக்கள் அமைந்துள்ளது.
நடுவில் உள்ள மொட்டு அரண்மனையையும், அந்த மொட்டில் வந்து குவியும் தேனீக்கள் மக்களாகவும், உருவகம் செய்து பாடப்பட்டுள்ளது.
மதுரையின் வரலாறு இந்த ஆண்டில் தொடங்குகிறது என சொல்ல முடியாத ஒரு சீரூர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி பல்வேறு பகுதிகளில் நடந்து சென்றால் அங்குள்ள தெருக்களும், அதன் பெயர்களும் மதுரையின் பழமையை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருப்பதை உணரலாம்.
சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டுவதைப் போன்று, ‘விழாமலி மூதூர்’ என்பதும் உண்மை.
ஆண்டு முழுவதும் விழாக்களும் கொண்டாட்டங்களும் நிறைந்த ஊராகவும் மதுரை திகழ்கிறது.




Reviews
There are no reviews yet.