பல்லவர் கல்வெட்டுகள் : செங்கற்பட்டு வட்டம் நூல் பற்றி
காஞ்சிபுரம் மாநகரத்தை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள்.
இம்மன்னர்களின் கல்வெட்டுகள் தொண்டை மண்டலம் முழுவதும் காணப்படுகிறது.
முதலாம் மகேந்திர பல்லவர், முதலாம் நரசிம்ம பல்லவர், ராஜசிம்ம பல்லவர், இரண்டாம் நந்திவர்ம பல்லவர், மூன்றாம் நந்திவர்ம பல்லவர் ஆகியோர் புகழ் பெற்ற அரசர்களாக இருந்துள்ளனர்.
வட தமிழகத்தில் குடைவரையை தோற்றுவித்த முதலாம் மகேந்திரரின் கல்வெட்டு செங்கற்பட்டு அருகே வல்லம் ஊரிலும், வாதாபி கொண்ட நரசிம்மவர்மரின் கல்வெட்டு திருக்கழுக்குன்றத்திலும், பல கோவில்களை கட்டி பெரும் புகழ் கொண்ட ராஜசிம்மரின் கல்வெட்டு திருப்போரூரிலும், தமிழ் வளர்த்த மூன்றாம் நந்திவர்மரின் கல்வெட்டு பொன் விளைந்த களத்தூரிலும் உள்ளது.





Reviews
There are no reviews yet.