மீகொன்றை நாடு நூல் பற்றி
மீகொன்றை நாடு என்ற இந்நூல் இம்மண்ணில் எஞ்சியுள்ள வரலாற்றுத் தடயங்களை மிக அழகாக எடுத்தியும்புகிறது.
உள்ளூர் வழக்காறுகள், ஊரின் பெயர்க் காரணங்கள்,
நடுகல் கல்வெட்டுகளில் பெறப்பட்ட உள்ளூர் குறுநில திணைத் தலைவர்கள் அவர்களுடன் ஏற்பட்ட பூசல்கள்,
சங்க இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும் நிரை கவர்தல்,
நிரை மீட்டல், வெட்சித்திணைக்காக களக்காட்சிகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் இந்நூல் மீகொன்றை நாட்டின் வரலாற்றை நுட்பமாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது.
இந்நூலின் சிறப்பான பகுதியாக இதுவரை அதிக அளவில் ஆய்வுக்கு உட்படுத்தாததும் அதிகம் பேசப்படாததுமான தாய் தெய்வக்கல், தனித்துவமான பாறைக்கீறல் ஓவியங்களும் வரலாற்றிற்குப் புதிய வெளிச்சத்தைத் தரும் என்பது உறுதி.
அதுபோலவே புகழ் பெற்ற சாத்தனூர் அணை குறித்த வரலாறும் அது தொடர்பான புகைப்படங்களும் இந்நூலுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.





Reviews
There are no reviews yet.