சிப்கோ இயக்கம் (ஒரு மக்கள் வரலாறு)

Author:
Translated by:
Publisher:

550.00

1973ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சிப்கோ இயக்கத்தின் வழியாகவே இந்தியாவில் நவீனச் சூழலியல் இயக்கம் தொடங்கியது.

சிப்கோ இயக்கத்தின் காரணமாக மரங்களை வெட்டுவது தடுக்கப்பட்டதோடு,

நீடித்த பயனுள்ள காடுகளுக்கும் அதைச் சார்ந்திருக்கும் மக்களுக்கும் இடையேயான சூழல் சமநிலையைப் பேணுவதில் இந்தியா கவனம் செலுத்தியது.

கல்வியியல், கொள்கை உருவாக்கும் வட்டாரங்களில் வளங்குன்றா வளர்ச்சி குறித்த விரிவான விவாதங்களைக் கிளறிவிட்டது.

சிப்கோவின் வரலாற்று அறிஞர்கள் இதுவரை சண்டி பிரசாத் பட், சுந்தர்லால் பகுகுணா ஆகிய இரண்டு முக்கியத் தலைவர்களைப் பற்றி கவனம் செலுத்தினார்கள்.

ஆனால், எளியோர்கள், இன்று சிப்கோ இருக்கக் காரணமான கௌரா தேவி போன்ற பெண்கள் உள்ளிட்ட அடிமட்டத்தைச் சேர்ந்தவர்களின் குரல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.

சேகர் பதக் இந்த மக்கள் வாழும் பகுதிகளில் வசித்தவர்.

நிலங்களை நுட்பமாக ஆராய்ந்தவர், போராட்டக்காரர்களையும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து உரையாடியவர்.

அந்த காலகட்டத்தின் உள்ளூர் செய்தித்தாள்களை தேடிக் கண்டுபிடித்தவர்.

சிப்கோ இயக்கம் தலைமையிலும் கொள்கையிலும் பன்மைத்துவம் கொண்டிருந்தது என்பதையும் அது ஒருபோதும் காந்திய இயக்கமாக மட்டும் இருக்கவில்லை என்றும் காட்டுகிறார்.

இந்த நூல் சிப்கோ இயக்கத்தின் வரலாற்றின் அனைத்துப் பரிமாணங்கலையும் ஆதாரப்பூர்வமாகப் பதிவுசெய்கிறது.