தோல் தோழா நூல் குறித்து
கோடையின் தாக்கத்தால் பல தோல் நோய்கள் வரலாம்; பல தோல் நோய்கள் அதிகப்படலாம். வெப்பத்தின் கொடுமையே தாங்க முடியாததாக இருக்கும் போது… இதில் தோல் நோய்களின் தாக்கம் வேறு சேர்ந்து கொண்டால்,
எரிச்சல், கோபம் இவற்றோடு மன அழுத்தமும் அதிகமாகி, மன அமைதியும் பெரிதும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாகிறது. இவ்வாறு கோடையில் ஏற்படும் தோல் நோய்கள், உடல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மன பாதிப்புக்கும் வழி வகுக்கின்றன
கோடை வெப்பத்தின் தாக்கத்தினால் வியர்வை அதிகமாகிறது. வியர்வை காய்ந்து, அந்த இடத்தில் உப்பு படிந்து, சொறி, நமைச்சல், கட்டி, கொப்புளம், சொரி சிரங்கு என்று …தொடர்கிறது. வியர்வையினால் பாக்டீரியாக்களுக்கும் கொண்டாட்டம் தான். வாய்ப்புக் கிடைத்தால் அவைகளும் தங்கள் கொண்டாட்டத்தைக் காட்டத் தவறுவதில்லை.
இவ்வாறு கோடைகாலங்களில் பல தோல் நோய்கள் ஏற்படுகின்றன என்பதோடு, எரிச்சல், ஊறல் போன்ற எல்லாத் தோல் நோய்களின் குறிகுணங்களுமே, கோடைகாலத்தில் மிகவும் அதிகரிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.
எனவே கோடை காலம் என்பது தோல் நோய்களுக்கு ஒரு Risk-கான காலம்தான்.
இந்த நிலையில்…இந்த வேளையில்… கோடையின் கொடுமையைக் குறைக்க… தோல் நோய்கள் வராமல் பாதுகாக்க…வந்தாலும் குறிகுணங்களின் தாக்கம் அதிகமாகாமல் தடுக்க… என்ன செய்யலாம்?




Reviews
There are no reviews yet.