உணவு எந்திரம் நூல் குறித்து
மாடு இல்லாமல் பால்!
ஆடு இல்லாமல் இறைச்சி!
கோழி இல்லாமல் முட்டை!
கழனி இல்லாமல் சோறு!
கடல் இல்லாமல் மீன்!
இவை நம் உணவு மேசைக்கு வரப்போகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இது அறிவியல் புனைகதையல்ல; உலகின் பல பகுதிகளில் இன்று உருவாகிக் கொண்டிருக்கும் சூழல்.
இந்த மாற்றம் வெறும் புதிய உணவுகளைப் பற்றியது அல்ல;
இது உணவை யார் உற்பத்தி செய்வார்கள்? யார் கட்டுப்படுத்துவார்கள்?
யார் லாபமடைவார்கள்? யார் வெளியேற்றப்படுவார்கள்?
என்ற அடிப்படையான அரசியல் கேள்விகளை எழுப்புகிறது.
சிலர் இது காலநிலை மாற்றம், விலங்கு நலன், உணவுப் பாதுகாப்பு போன்ற சிக்கல்களுக்குத் தீர்வாகலாம் என்கின்றனர்.
ஆனால் உணவைத் தருவது நிலமா? ஆய்வகமா? உழவர்களா?
அல்லது பன்னாட்டு நிறுவனங்களா? என்ற விடையற்ற வினாக்கள் எழுகின்றன.
கோடிக்கணக்கான உழவர், மேய்ப்பர், மீனவர் நிலை என்ன?
அவர்களின் வாழ்வாதாரம், அறிவு, பண்பாடு, சமூக இடம் எங்கே?
இந்தப் புத்தகம் தொழில்நுட்பத்தின் சிக்கல் சிடுக்குகளை விளக்குகிறது.
இத்துறையின் முதலீடுகள், காப்புரிமைகள், கார்ப்பரேட் அதிகாரம், சூழலியல் உரையாடல்கள், உணவு அரசியல் ஆகியவற்றையும் ஆராய்கிறது.
உணவு எந்திரங்கள் உண்மையில் உலகப் பசியைத் தீர்க்குமா,
அல்லது புதிய சந்தைகளை உருவாக்கும் வணிகத் திட்டமா என்ற கேள்வியையும் முன்வைக்கிறது.
உணவு மெதுவாக உயிரியல் தரவுகளாகவும் தொழில்நுட்பத் தயாரிப்புகளாகவும் மாற்றப்படும் அரசியலை இந்த நூல் விளக்குகிறது.
இந்தப் புத்தகத்தை வாசிப்பது செயற்கை உணவைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மட்டும் அல்ல;
மனிதகுலத்தின் உணவு எதிர்காலம் எந்தத் திசையில் நகர்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும் ஆகும்.
ஏனெனில் வரவிருக்கும் காலத்தின் மிக முக்கியமான போராட்டங்களில் ஒன்று நிலத்திற்கான போராட்டமாக இருக்காது;
உணவைக் கைப்பற்றுபவர்களுக்கான போராட்டமாக இருக்கக்கூடும்.
உழவர்களுக்காக, மேய்ப்பர்களுக்காக, மீனவர்களுக்காக, மக்களின் நல்வாழ்விற்காகப் பேசுவோர், எழுதுவோர், செயல்படுவோர் ஆகியோரின் கைகளில் இருக்க வேண்டிய ஒரு சிந்தனை ஆயுதம் இந்நூல்.




Reviews
There are no reviews yet.