குறுநரிகள் வாழ்ந்த காடு

Author:
Publisher:

50.00

மனிதர்களின் முகத்தில் விழிக்க நரிகள் விரும்புவதில்லை!

மனிதர்களை அழைக்க, அச்சுறுத்த நரிகள் ஊளையிடுவதில்லை!

இல்லாத தனது கொம்பை ஆன்லைன் வரையிலும் மனிதர்கள் தேடித்திரிகிறார்கள் என்பது நரிகளுக்குத் தெரியாது!

விலங்குகளின் உணவுப்பழக்கத்தை வைத்து, அதன் குணநலன்களைக் குறிப்பிடும் அறியாமையை மனிதர்கள் விட்டொழிக்க வேண்டும்.

விலங்குகள் வேட்டையாடி உண்பதில் வீரமுமில்லை!

தந்திரமுமில்லை!

புத்திசாலித்தனமுமில்லை!

அது அதன் உயிர்வாழ்தலின் இயல்பு.

ஓர் ஊரிலே… என்று கதைகளில் பாத்திரமாகும் குறுநரிகளை ஒவ்வொரு ஊரிலும் பத்திரமாக வாழவைக்கும் அறத்தைப் பேசுகிறது இந்நூல்!