ஓய்ந்திருக்கலாகாது புத்தகதில்
இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள்.சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும் முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும்,சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும்.அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு.
3 கல்வி சார்ந்த சிறுகதைகளை தாங்கி நின்ற அந்த புத்தகத்தின் பெயர் “ஓய்ந்திருக்கலாகாது”
ஆரம்பமே ச.பாலமுருகனின் “பள்ளித் தளம்” சிறுகதை மிக நெருக்கத்தை ஏற்படுத்திய கதை. இதுவே என்னை புத்தகத்தை முழுவதும் முடித்தாகவேண்டும் என்று என்னை தூண்டியது. கதை ஆரம்பிக்கும் இடமும் கதையின் சூழலும் தான் இதற்கு காரணம், சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள கொங்காடை, பர்கூர் மலை கிராமங்களை கடந்து ஒன்னகரை கிராமத்தில் கதை நிகழ்கிறது. இந்த பகுதிகளில் கதை சொல்லுறோம் வாங்க குழுவில் நானும் ஒருவனாக மூன்று முறை சென்று வந்த அனுபவம். மறக்க முடியாத அனுபவங்களுடன் கிடைத்த பல விளையாட்டு தோழர்கள் எனக்கு அங்கு உண்டு.
அடுத்த கதை அடுத்த கதை என ஒவ்வொரு கதையும் எனக்கு அந்த புத்தகத்திற்க்குமான நெருக்கத்தை மேலும் கூட்டிக்கொண்டே சென்றது. இதில் 13 சிறுகதைகள் வெவ்வெறு காலக்கட்டங்களில் வாழ்ந்த 13 எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. ஆனால் அரசி –ஆதி வள்ளியப்பனின் கதையின் தேர்வு மிகவும் நேர்த்தியானது
ஒரு சிறுகதையின் முடிவில் இருந்து அடுத்த சிறுகதையின் ஆரம்பம் இருக்கிறது.
முடிவின் ஆரம்பம் ஒரு நாவலை படித்து முடித்த திருப்தியை தருகிறது.
Reviews
There are no reviews yet.