கல்வெட்டு ஓர் அறிமுகம் என்ற நூலைப் பற்றி
Prehistoric period எனப்படும் வரலாற்றிற்கு முந்தைய காலகட்டத்தில் உருவெழுத்தாக ஆரம்பித்த தமிழக தொல்மாந்தரின் முதல் எழுத்துரு,
அதன்பின் குறியீட்டு எழுத்தாக உருமாற்றம் கொண்டு, அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக தமிழி எழுத்துகளாக Historical period எனும் வரலாற்றுக் காலத்தில் வளர்ந்து,
அதிலிருந்து பிரிந்து வட்டெழுத்து, கிரந்தம் எனும் எழுத்துகளாய் மாறி, சோழர்கள் காலத்தில் தற்போது நாம் எழுதும் எழுத்துகளின் முந்தைய வடிவ தோன்றியது.
சோழர்கள் வீழ்ச்சியுற்று, பாண்டியர்கள் ஆதிக்கம் பெற்ற 13ம் நூற்றாண்டிற்குப் பின்னரும் இத்தகைய எழுத்துருவே பயன்படுத்தப்பட்டது.
பாண்டியருக்குப் பின் விஜயநகர, நாயக்கர் அரசுகள் இத்தகைய எழுத்து வடிவங்களையே பயன்படுத்தியதால் இந்த எழுத்து வடிவமே தமிழகம் முழுவதும் நிலைகொண்டது.
அதன் தொடர்ச்சியே இன்று நாம் பயன்படுத்தும் எழுத்துருக்களாகும்.




Reviews
There are no reviews yet.