வட தமிழ்நாட்டு இருளர் வாழ்வியலும் அவர்களின் மரபுசார் அறிவும்

Author:
Publisher:

300.00

பழங்குடி சமூகங்கள் அவர்களின் சிறந்துபட்ட வாழ்க்கை முறை, வட்டார தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடனான இணக்கமான உறவால் அடையாளம் காணப்படுகின்றனர்.

ஆனால் இந்த வளமான அறிவும் இயற்கைசார் திறன்களும் உலகமயமாக்கப்பட்ட, அதிகரித்து வரும் ஒருமைபடுத்தப்பட்ட உலகில் மிக விரைவாக அழிந்து வருகின்றன.

தமிழகத்தின் அடையாளப் பழங்குடியாக வாழும் இருளர்கள் அவர்களுடைய பாம்பு மற்றும் எலி பிடிதிறன்களுக்காக வட மாவட்டங்களில் நன்கு அறியப்பட்டவர்கள்.

அவர்களின் மரபுவழி அறிவுக்கு மற்றொரு பக்கம் உள்ளது.

இது வட்டார சூழல் மண்டலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் உயிரிமூலங்களின் நீள்நிலைப் பயன்பாட்டின் மூலம் வாழும் வாழ்க்கை பற்றிய ஆழமான புரிதல் ஆகும்.

மூலிகைகளின் மூலம் நோய்களை முழுமையாக குணப்படுத்துவது பற்றிய அவர்களின் மரபுவழி அறிவையும் நோய்கள், விஷக்கடி, உணவு மற்றும் மருத்துவத் தாவரங்கள் பற்றிய புரிதலையும் வட தமிழ்நாட்டு இருளர் வாழ்வியலும் அவர்களின் மரபுசார் அறிவும் எனும் இப்புத்தகம் விரிவாக விவரிக்கிறது.