எங்கெங்கும் மாசுகளாய்… மண் முதல் விண் வரை நூலைப் பற்றிய குறிப்பு
சூழலியல் எழுத்து கவனம் பெற்றுவரும் நிலையில்,
இதழாளர்களும் அது குறித்து கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
நிலம், நீர், காற்று, ஒலி மாசுகளைப் பற்றி இந்நூல் தனித்தனியாகப் பேசியுள்ளதுடன்,
நியூட்ரினோ திட்டம் பற்றியும் ஒரு கட்டுரை எடுத்துரைக்கிறது.
ஞெகிழி ஏற்படுத்தும் ஆபத்தைப் பற்றி விவரித்துள்ள மூன்று கட்டுரைகளின் முடிவாக மஞ்சள் பை தூக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
காடுகள், பறவைகள், யானை வழித்தடம் என இயற்கை பாதுகாப்பின் அவசியத்தைச் சுட்டிக்காட்டும் கட்டுரைகளுடன் இந்த எங்கெங்கும் மாசுகளாய்… மண் முதல் விண் வரை எனும் நூலைப் படைத்துள்ளார் மூத்த இதழாளர் ப. திருமலை.
வனங்கள் அழிக்கப்படுவதும்,
மலைகள் உடைக்கப்படுவதும்,
நீர் நிலைகள் அக்கிரமிக்கப்படுவதும்,
கடற்கரைகள் சுற்றுலா மையங்களாக்கப்படுவதும்,
காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைத் துவங்குவதும்,
பூமியில் வெப்பநிலையை அதிகப்படுத்துவதும் போன்ற ஆபத்தான விளைவுகளைப் பற்றிய அறிஞர்களின் எச்சரிக்கைகளை எங்கெங்கும் மாசுகளாய்… மண் முதல் விண் வரை எனும் இந்நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.




Reviews
There are no reviews yet.