கடலில் கசிந்த கச்சா எண்ணெய்

Author:
Publisher:

30.00

சமீபத்தில் சென்னைத் துறைமுகத்தில் நிகழ்ந்த எண்ணய்க்கசிவை அரசு எதிர்கொண்ட விதமும் கையாண்ட முறைகளும் இந்தியா முழுவதும் கேலிக்கூத்தானது.

கடுமையான நச்சுத்தன்மை கொண்ட நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எண்ணைக் கழிவுகளை முறையாகக் கையாள இயலாதது மட்டுமின்றி முறையான தகவல் பரிமாற்றம் கிடைக்கப்பெறாமையே அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்கள்மீதான நம்பகத்தன்மையை கேள்விக் குள்ளாக்குகிறது.

விபத்தின்பொழுது கடலில் கலக்கும் எண்ணெய் கழிவால் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரம் தான் என்பதையும் கடல் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதையுமே மறுக்கும் அரசிடம் நாம் எதனை எதிர்ப்பார்ப்பது?